திருக்குறள்

1214.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.

திருக்குறள் 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.

பொருள்:

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

மு.வரததாசனார் உரை:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

சாலமன் பாப்பையா உரை:

நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.